நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 128 வது பிறந்தநாள் விழா பொள்ளாச்சி சார் ஆட்சியர் மலர் தூவி மரியாதை!!!!
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 128 வது பிறந்த நாளை முன்னிட்டு பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில் மத்திய பேருந்து நிலையம் முன்பு மரக்கன்றுகள் வழங்கியும் அன்னதானம் வழங்கியும் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது..
இந்நிகழ்ச்சிக்கு பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை தலைவர் ஆர் .வெள்ளை நடராஜ் தலைமை தாங்கினார்.
பேரவை செயலாளர் மணிகண்டன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்ரின் சரண்யா அவர்கள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து பொதுமக்களுக்கும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்று வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து
பொள்ளாச்சி என் .ஜி .எம் கல்லூரி முன்னாள் முதல்வர் ரெ. முத்துக்குமரன் மற்றும்
கல்லூரி முதல்வர் மாணிக்க செழியன் ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கல்லூரி மாணவ மாணவிகள் இடையே மாவீரர் நேதாஜி குறித்து உரையாற்றினர்..
இந்நிகழ்ச்சியில்
மதிமுக மாவட்ட செயலாளர் குகன் மில் செந்தில். திமுக நகர துணை செயலாளர் ச. தர்மராஜ். தேமுதிக நகர செயலாளர் கணேசன். பொள்ளாச்சி கம்பன் கலை மன்ற தலைவர் கே. எம். சண்முகம்.
பட்டாம்பூச்சி இலக்கிய களம் கவிஞர்.முருகானந்தம் முதலுதவி சமூக நல அறக்கட்டளை நிறுவனத் தலைவர் முனைவர். அபு.இக்பால்.நகர மன்ற உறுப்பினர்கள் எம் .கே சாந்தலிங்கம்.
பேரவை நிர்வாகிகள் ஜீபீர் விக்னேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இறுதியில் பேரவை நிர்வாகி விக்கி நன்றி கூறினார் இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி என். ஜி. எம் வரலாற்று துறை மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலரும் திரளாக கலந்து கொண்டனர்.