ஈரோடு நவ 26
தமிழ்நாடு அரசின் சார்பில் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைத்திட தலா ரூ.5,000 நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்டத்தில் 1288 அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைக்க தலா ரூ.5,000 வீதம் ரூ.64,40,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பள்ளிகளில் காய்கறித் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த காய்கறித் தோட்டத்தில் கத்தரி, வெண்டை, வெள்ளரி, தென்னை, வாழை, கொய்யா, முருங்கை, சுண்டல், நெல்லி, பாதாம், கறிவேப்பிலை போன்றவை வளர்க்கப்படுகிறது. மேலும், இதன் பலன்கள் அனைத்தும் பள்ளியில் பயிலும், மாணவர்களுக்கும், சத்துணவிற்கும் வழங்கப்படுகிறது. மேலும், கோபி அருகே உள்ள பொம்மநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அரசின் மூலம் காய்கறி தோட்டத்துடன் இணைந்து மூலிகைத் தோட்டம் மற்றும் உயிர்வளித்தோட்டம் என முத்தோட்டம் அமைக்கப்பட்டு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரே நேரத்தில் 7 வாழை வெட்டப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது சாதனையாகும்.
இந்த மூலிகைத் தோட்டத்தில் எளிதில் கிடைக்காத பல மூலிகைச் செடிகள் வளர்க்கப்படுகின்றன. ஆடாதொடை, இன்சுலீன் செடி, பூனைமீசை, வெட்டிவேர், லெமன்க்ராஸ், மைமோசா, இனிப்புத்துளசி, திப்பிளி, சங்கு புஷ்பம், மருதாணி, திருநீற்றுப் பத்திரி, கற்பூர வல்லி போன்ற மூலிகைத் தாவரங்கள் வளர்க்கப்பட்டு பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டு வருகிறது. இந்த மூலிகைகள் வயிற்று உபாதைகள் முதல் சிறுநீரகக் கல் கரையச் செய்யும் வைத்தியம் வரை பயன்படுத்த உகந்ததாக உள்ளது. கருநொச்சி இலையும் ஜலதோஷத்திற்கு ஆவி பிடிக்க வழங்கப்படுகிறது. மேலும், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பள்ளியிலேயே இயற்கையான முறையில் விளைவித்த
ஊட்டச்சத்து நிறைந்த கீரை, காய்கறிகள் வழங்குவதன் மூலம் வளர் இளம் பெண்
குழந்தைகளுக்கு ரத்தசோகை போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க இயலும்.
மேலும், உயிர்வளித்தோட்டத்தில் அதிகமான பிராண வாயுவை வெளியிடும்
தாவரங்களை கண்டறிந்து அவைகளை நடவு செய்து வளர்த்து வருகின்றனர். இதில்
கற்றாலை, நாகதாளி, மணி பிளேண்ட், கல்வாழை, ஆர்க்கீட்ஸ், சோலைப்பூ, மா, மருதாணி,
வெற்றிலை, பூவரசு, ஹைட்ரோ போனிக் ப்ளேண்ட் என செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது.
இந்த பகுதிக்குள் நுழைந்தவுடன் 2 முதல் 3 டிகிரி வரை வெப்பநிலை குறைவாக
இருப்பதை கண்டுணர முடியும்.
ஈரோடு மாவட்டம், ஆர்.என்.புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள
காய்கறித் தோட்டம் குறித்து பள்ளி மாணவர்கள் விக்னேஷ், ஐயப்பன், தேவா ஆகியோர் தெரிவித்தாவது
தமிழ்நாடு அரசின் சார்பில் எங்கள் பள்ளியில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இத்தோட்டத்தில் காய்கறி மற்றும் கீரைகளை அறுவடை செய்யும் பொழுது, எங்களுக்கு வேளாண்மை மீதுள்ள ஆர்வம் அதிகரிக்கின்றது. இதனால் நாங்கள் இயற்கையான சூழலில் பயிலவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், வேளாண்மை பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் எங்களுக்கு மதிய உணவிற்கு வழங்கப்படும் சத்துணவில் வழங்கப்படுகிறது. மேலும் பாடங்களை உற்சாகமாக படிக்கவும் ஏதுவாக உள்ளது. இத்திட்டத்தினை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு எங்கள் பள்ளியின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் தெரிவித்தனர்.