தஞ்சாவூர்.மே 20
தமிழகத்தில் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சாவூர் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு தமிழகத் தின் பல்வேறு பகுதிகளுக்கு அர வைக்காக லாரிகள், சரக்கு ரெயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை செய்யப்பட்டு, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைக ளுக்கும் நெல் அனுப்பப்படும். அதன்படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 1250 டன் புழுங்கல் அரிசி முட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டன. பின்னர் சரக்கு ரயிலில் 21 வேகன்களில் 1,250 டன் புழுங்கல் அரிசி மூட்டை கள் ஏற்றப்பட்டு, வேலூர் காட்பாடி க்கு பொது விநியோகத் திட்டத்திற் காக அனுப்பி வைக்கப்பட்டன.