தருமபுரி டவுன் அண்ணாமலை கவுண்டர் தெரு வில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ முத்து மாரியம்மன் திருக்கோவிலின் பத்தாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதான திருவிழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள் புரிந்தார். இவ்விழாவிற்கான ஏற்பாட்டை விழா குழுவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.



