கிருஷ்ணகிரி ஜூன் 04 :
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதி ஜெகதேவி பேருந்து நிலையத்தில் செம்மொழி நாயகரும், திராவிட மாடல் அரசின் முன்னோடியும், முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் விழா கிழக்கு மாவட்ட செயலாளர் திரு மதியழகன் எம் எல் ஏ அவர்களின் வழிகாட்டுதலின்படி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜே.கே.கிருபாகரன் தலைமையில், ஒன்றிய துணை செயலாளர் ராஜ் (எ)ராஜதுரை, இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் எஸ்.பாலாஜி, தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன், அஞ்சூர் PTA சங்கத் தலைவர் நெடுஞ்செழியன், பையாஸ் ஆகியோர் முன்னிலையில் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த 102 வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் நந்தகுமார், முருகேசன், சீதாராமன், தகவல் தொழில்நுட்ப பிரிவு அருண், அனீஸ்பாபு, ராமமூர்த்தி, முருகன், ரமேஷ், பாபு, நஞ்சுண்டன், சுரேஷ், பிரபாகரன், பில்லாசக்தி, மகி,ஜெ.கே.குமார், கனகராஜ், ராஜேந்திரன், நவாப், எம்.ஜி.சுப்பிரமணி, ஜோதி இராவணன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். தமிழுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 102 வது பிறந்த நாளை போற்றும் வகையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கலைஞரின் சாதனைகளை ஜே.கே.கிருபாகரன் எடுத்துரைத்தார்
செம்மொழி நாயகன், முன்னால் தமிழக முதல்வர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாள்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics