அரியலூர், ஜூன்:02
அரியலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளர் ச.அ.பெருநற்கிள்ளி , மாநில செயற்குழு உறுப்பினர் எம்.பி.பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலையில்,
ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தலைமையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், ஜூன் – 3 அன்று முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 101 – வது பிறந்தநாளை முன்னிட்டு, இனிப்புகள் வழங்கி, வெடி வெடித்து, நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பேரூர் கழக செயலாளர்கள், அனைத்து அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.