மார்த்தாண்டம், பிப். 16 –
ரஷ்யாவை சேர்ந்த 4 வெளிநாட்டினர் முஞ்சிறை திருமலை, திக்குறிச்சி, திற்பரப்பு என பனிரெண்டு ராசிகளின் பரிகார ஸ்தலமான சிவாலயங்களுக்கு சிவாலய ஓட்டம் சென்றனர். அவர்கள் திக்குறிச்சி மஹா தேவர் கோயிலுக்கு வந்த போது பக்தர்களோடு பக்தர்களாக வரிசையில் நின்று காணிக்கையிட்டு விபூதி பிரசாதம் வாங்கி கொண்டனர்.
தொடர்ந்து கோயிலில் முன் நின்று புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து கொண்டனர். அப்போது உள்ளூர் பக்தர்கள் சிலர் அவர்களோடு செல்ஃபி எடுத்து கொண்டனர். அவர்கள் பக்தர்களிடம் பேசியபோது இந்தியா தேசபக்தி தெய்வபக்தி அதிகம் கொண்ட நாடு. இந்தியாவின் ஆன்மீக கலாச்சாரம் மிகவும் பிடித்து இருப்பதாகவும் கோயிலுக்கு செல்லும் போது ஒரு பாசிட்டிவ் எனர்ஜி உடலில் கிடைத்ததாகவும் வித்தியாசமான புனித யாத்திரையாக இருப்பதாகவும் கூறினார்கள். முடிந்தால் அடுத்த ஆண்டு நண்பர்கள் சேர்ந்து குழுவாக வருவோம் என்று தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு அதன் முந்தைய ஆண்டுகளில் இது போன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். ஆண்டு தோறும் பல வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் மஹா சிவாலய ஓட்டம் மற்றும் சிவராத்திரி விழாவில் பங்கேற்று வருவது தொடர்கிறது.



