வேலூர், செப். 12 –
வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அரசு கூடுதல் செயலாளர் மருத்துவர் ச.உமா, அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம், விரிஞ்சிபுரம் ஊராட்சியில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை கோரி மனு அளித்த பயனாளிக்கு மருத்துவ காப்பீட்டு அட்டையினை வழங்கினார்.
இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் த. மாலதி, தனித்துணை ஆட்சியர் கலியமூர்த்தி, அணைக்கட்டு ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் சித்ரா குமரபாண்டியன், ஒன்றியக்குழு உறுப்பினர் சசிகலா சுப்பராயன், ஊராட்சி மன்ற தலைவர் குணசுந்தரி பாலு உட்பட பலர் உடனிருந்தனர்.



