மார்த்தாண்டம், ஆக. 19 –
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பிறந்த தினத்தை முன்னிட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அன்று பிறந்த 6 குழந்தைகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வக்கீல் அணி மாநில துணை செயலாளர் வக்கீல் திலீப் சிங் தலைமையில் தங்க மோதிரம், இனிப்பு வழங்கப்பட்டது.
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எம்பி 63-வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அன்று பிறந்த 6 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வக்கீல் அணி மாநில துணைச் செயலாளர் வக்கீல் திலீப் சிங் தலைமை வகித்தார். சமூக நல்லிணக்க பேரவை தென் மண்டல செயலாளர் ஸ்டீபன் முன்னிலை வகித்தார்.
அரசு ஊழியர் ஐக்கிய பேரவை மாநில துணைச் செயலாளர் தங்க ஈழவளவன், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி செயலாளர் சுரேஷ் குமார், குழித்துறை நகர செயலாளர் சுரேஷ்குமார், இளம் சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் அருள், சமூக நல்லிணக்க பேரவை ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பாளர் பத்ம ராஜா, மேல்புறம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஆண்டனி, கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை மேற்புறம் ஒன்றிய தலைவர் டென்னிஸ், அருமனை பேருர் செயலாளர் ஜோய், முஞ்சிறை ஒன்றிய செயலாளர் சுனில் குமார், மேற்கு மாவட்ட வக்கீல் அணி துணை செயலாளர் செந்தில்குமார், இணைச் செயலாளர் கிங்ஸ்டன் ரெஜிவ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



