சுசீந்திரம், ஆக. 12 –
நாகர்கோவில் அருகே உள்ள வடசேரி கொம்மண்டை அம்மன் கோயிலில் ஆடி கடைசி செவ்வாயை முன்னிட்டு சிறப்பு அபிஷேக அலங்கார தீவிரனை நடைபெறுவது வழக்கம். அதுபோல இன்று ஆடி கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாரதனை நடைபெற்றது. இதில் குமரி மாவட்ட முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி. ராமகிருஷ்ணன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். உடன் தி.மு.க கழக நிர்வாகிகள் நாகராஜ், செல்வம் மற்றும் கோயில் பக்தர்கள், ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.



