பூதப்பாண்டி, ஜுலை 07 –
பூவச்சல் பகுதியை சேர்ந்த பிரவின் (40) என்பவர் கடந்த இரண்டாம் தேதி மாலை சுமார் 4.30 மணியளவில் நெல்லை மாவட்டம் கல்லிடகுறிச்சிக்கு லோடு ஏற்ற டாரஸ் லாரியை ஓட்டி சென்றார். பூதப்பாண்டியை அடுத்துள்ள ஆண்டித் தோப்பு பகுதியில் டாரஸ் லாரி செல்லும் போது எதிரே ஏற்றக்கோடு சாரல் விளை பகுதியை சேர்ந்த ஜெயமோகன் (37) என்ற வாலிபர் தனது பைக்கில் அதிவேகமாக வந்து மோதினார். அதில் நிலை தடுமாறி டாரஸ் லாரியின் வலது பின் பக்க சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பலனின்றி ஜெயமோகன் நேற்று மாலை இறந்துள்ளார். இது குறித்து டாரஸ் லாரி ஓட்டுனர் பிரவின் கொடுத்த புகாரின் அடிப்படையில் பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.