இராமேஸ்வரம், செப். 22 –
ராமேஸ்வரத்தில் புரட்டாசி மஹாளாய அமாவாசையொட்டி லட்சக்கணக்காண பக்தர்கள் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு அக்னி தீர்த்த கடற்கரையில் திதி கொடுத்து வழிபாடு செய்தனர்.
இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் இந்துக்களின் தீர்த்த மூர்த்தி புனித ஸ்தலமாக விளங்கி வருகின்றது. இந்த திருக்கோவிலில் நம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை தை அமாவாசை மஹாளய அமாவாசை போன்ற காலங்களில் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி திதி கொடுத்து வழிபாடு நடத்தினால் பாவ விமோச்சனம் அடைவார்கள் என்பது ஐதீகம்
இதனால் இந்த கோவிலில் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்துவதற்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நள்ளிரவு முதலே ராமேஸ்வரத்தில் வந்து குவிந்தனர். அதிகாலையில் அக்னி தீர்த்த கடற்கரையில் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்பணம் திதி பிதுர்ஹர்மா பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து ராமநாத சுவாமி திருக்கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்ற பின்பு அக்னி தீர்த்த கடற்கரைக்கு சுவாமி எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது. பொதுமக்கள் பக்தர்கள் கோவிலுக்கு உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடிய பின் தரிசனம் செய்தனர்.
மேலும் இந்த புரட்டாசி அமாவாசைக்காண பாதுகாப்பு ஏற்பாட்டினை மாவட்ட கண்காணிப்பாளர் சந்தீஷ் தலைமையில் 1 Asp 2 Adsp 4 Dsp காவல் ஆய்வாளர் சிறப்பு காவல் ஆய்வாளர் ஆயுதப்படை காவலர்கள் ஊர்க்காவல் படை காவலர்கள் சுமார் 600 போலீசார் பட்டாலியன் போலீசார் 150 பேர் குவிக்கப்பட்டனர்.மேலும் கோவில் நான்குரத வீதி அக்னி தீர்த்தம் ஆலயம் நகராட்சி பார்க்கிங் கோவில் வாகன நிறுத்துமிடம் 22 தீர்த்த கிணறுகள் கோவில் உள்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் ரயில் நிலையம் அருகே உள்ள ராம் பார்க் தோப்பில் பக்தர்கள் கட்டணமின்றி தங்கி செல்வதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். கோவிலுக்குள் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக இணை ஆணையர் செல்லத்துரை மேற்பார்வையில் கோவில் பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



