சென்னை, ஆகஸ்ட் 25 –
சென்னை ரோட்டரி சங்கம் 3234 மாவட்ட ஆளுநர் ஏ.கே. எஸ் வினோத் சரோகி தலைமையில் நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் 100 மகளிருக்கு பிங்க் ஆட்டோக்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சர்வதேச ரோட்டரி சங்க தலைவர் பிரான்செஸ்கோ அரெஸ்ஸோ ஆகியோர் சிறப்பு விருந்தினாரக கலந்து கொண்டு பிங்க் ஆட்டோக்களை வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: இந்த திட்டம் மாநிலத்தின் பெண்கள் முன்னேற்றக் கண்ணோட்டத்துடன் இணைப்பது மட்டுமல்லாது அவர்களின் முன்னேற்றத்திற்கு வலிமை சேர்க்கும். குடும்ப பொருளாதாரத்தை உயர்த்தும். இதுபோன்ற நிகழ்வின் மூலம் தமிழ்நாட்டின் மீது புதிய நம்பிக்கையை உருவாகும் என்றார். ரோட்டேரியன்ஸ் எம். முருகானந்தம் மற்றும் லெப்டினன்ட் கே.பி. நாகேஷ், சிவா மற்றும் ஆர்.ஐ இயக்குநர்கள் (2025–27) உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.



