திருப்பூர், ஜூன் 23 –
திருப்பூர் வடக்கு மாவட்டம் வடக்கு மாநகரம் மாநகராட்சி, மண்டலம்-2, வார்டு-30, பெருமாநல்லூர் சாலை மேட்டுப்பாளையம் பகுதியில், ரூ.150 இலட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர், மாண்புமிகு மேயர் ந.தினேஷ்குமார், துணை மேயர் ஆர்.பாலசுப்ரமணியம், மாவட்டக் கழக அவை தலைவர் க.நடராசன், கொங்கு நகர் பகுதி செயலாளர் போலார் சம்பத்குமார், வடக்கு மாநகர அவை தலைவர் ஈஸ்வர மூர்த்தி, துணை செயலாளர் ராமசாமி, மண்டலத் தலைவர் தம்பி கோவிந்தராஜ், வட்டக் கழக செயலாளர் நித்தியானந்தம், மாமன்ற உறுப்பினர்கள் மருத்துவர் கலைச்செல்வன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.