தஞ்சாவூர், மே 14 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் இட ஒதுக்கீட்டில் சான்று பெறுவதற்கான வழிமுறைகளை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது: தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களின் சிறார்களுக்கு 2026-27 கல்வி ஆண்டில் கல்லூரி பட்டப்படிப்புகள் மேற்படிப்புகள், பட்டய மேற்படிப்புகள் மற்றும் தொழில் சார்ந்த (இளநிலை மற்றும் முதுநிலை) உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில் சேர இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் கல்வி நிறுவனங்களில் கல்வி சேர்கைக்காக முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள், சான்று பெற மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில், சான்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த சான்று பெற முன்னாள் படை வீரரின் அசல் படை விலகல் சான்று, ஓய்வூதிய ஆணை, சிறார் அவர்களின் மதிப்பெண் சான்று நகல் அல்லது கணினியில் பதிவிறக்கம் செய்த சான்று (பள்ளியில் மேலொப்பம் பெற்று) பெயர், படை விலகல் சான்று இல்லையெனில், பகுதி இறுதி ஆணை, இணையதளத்தில் விண்ணப்ப நகல் ஆகியவற்றுடன் தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தை நேரில் அணுகவும்.
மாவட்ட அலுவலகத்துக்கு நேரில் வர இயலாதவர்கள் https://exwel.tngov.in என்ற இணைய
தள முகவரியில் இருந்து முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் சான்று பெறும் விண்ணப்பம் மற்றும் முன்னாளுமை சரிபார்ப்பு படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை இணைத்து exweltnj@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலக தொலைபேசி எண் (04362-230104) தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் கூறியுள்ளார்.



