பரமக்குடி,மே. 26: பரமக்குடி அருகே சத்திரக்குடியில் தமிழக முதல்வர், திமுக தலைவர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மாநில அளவிலான மின்னொளி கபாடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கு மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். உயர் நீதிமன்றம் மதுரை கிளையின் அரசு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி வரவேற்றார். பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், இளைஞர் அணி மாநில துணை அமைப்பாளர் இன்பா ரகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை அரசு பிலீடர் திலக்குமார், முன்னாள் இந்திய கபடி வீரர் கணேசன் ஆகியோர் விளையாட்டுப் போட்டியினை துவக்கி வைத்தனர். இதில், ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற முதல் பரிசினை நரிப்பையூர் அணியினர் பெற்றனர். இதனைத் தொடர்ந்து 5பரிசுகளைப் பெற்ற அணியினர்களுக்கு கேடயம் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சுந்தரராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சம்பத் ராஜா ஒன்றிய செயலாளர் குணசேகரன், ஜெயக்குமார், பொதுக்குழு உறுப்பினர் பூமிநாதன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் குமரகுரு, சன் சம்பத்குமார், பரமக்குடி தெற்கு நகர் இளைஞர் அணி அமைப்பாளர் துரைமுருகன், வழக்கறிஞர்கள் பரமசிவம், கோபு மற்றும் பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கபாடி போட்டியினை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் அரசு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி தலைமையில் திமுகவினர் செய்திருந்தனர்.