நாகர்கோவில் மே 5
கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக கோடைகாலத்தில் ஏற்படும் வெப்பத்தின் தாக்கத்தில் நோய்களை கண்டறிந்து அதன் நோய்களுக்குத் தேவையான சிகிச்சை முறைகளை அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்படும் இதேபோன்று கோடை காலத்தில் மக்களுக்கு குடிநீர் வழங்கும் நீர்த்தேக்கங்களின் நீரை இருப்பு வைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகர் முழுவதும் மட்டுமல்ல கன்னியாகுமரி வரை உள்ள 200க்கும் மேற்பட்ட வழியோர கிராமங்களுக்கும் குடிநீருக்கான முக்கிய நீர் ஆதாரமான முக்கடல் அணை உள்ளது இந்த அணை நாகர்கோவில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. கோடைகாலம் நெருங்குவதற்கு முன்பே இங்கு தேவையான தண்ணீர் இருப்பு வைக்காததால் தண்ணீர் இப்போது மைனஸ் டிகிரிக்கு கீழ் சென்றுள்ளது 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையின் உடைய நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி மைனஸ் 3.20 அடியாக குறைந்துள்ளது எனவே நகர் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது அரசின் அலட்சியமே இதற்கு காரணம் என பல்வேறு தரப்பினர்களும் கூறுகின்றனர்.
முக்கடல் அணை நீர்மட்டம் கடும் சரிவு. நாகர்கோவில் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics