அரியலூர், மே:07
அரியலூர் மாவட்டம் மாநில அளவில் 3 வது இடத்தை பெற்றுள்ளது. மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி சதவீதம் 97.25 ஆகும். மேலும் தேர்ச்சி பெற்ற பள்ளிகளில் அரசுப்பள்ளி – 23, அரசு உதவிபெறும் பள்ளி – 6, மெட்ரிக் பள்ளி – 15, சுயநிதி பள்ளி – 9 ஆக மொத்தம் 53 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றதற்காக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கும், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா பொன்னாடை போற்றி, வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.



