திருப்பூர், ஜூன் 20 –
புதிதாக பதிவு செய்துள்ள திருப்பூர் மாற்றுத்திறனாளிகள் நல முன்னேற்ற சங்க பணிகள் சிறக்க அமைச்சர் வாழ்த்து; திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் நாரணவரே மனீஷ் சங்கர் ராவ் அவர்களுடன், மாவட்ட பொறுப்பு அமைச்சர் (ம) மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருன்ராஜ், அவர்களை திருப்பூர் மாற்றுத்திறனாளிகள் நல முன்னேற்ற சங்க தலைவர் ஈ.பி.அ.சரவணன், நிர்வாகிகள் கணபதி, பாலகுமார், பனியன் சிட்டி கன்ஸ்யூமர் வெல்பேர் அசோசியசன் தலைவர் கே.ஏ.கே.கிருஷ்ணசாமி, ரவி சந்தித்தனர்.
அமைச்சரிடம் திருப்பூர் மாற்றுத்திறனாளிகள் நல முன்னேற்ற சங்கத்தினர் அளித்துள்ள மனுவில்: திருப்பூரில் வெள்ளிதோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வந்த மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் தற்போது திடீரென திருப்பூர் தாராபுரம் சாலையிலுள்ள அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியாக மாற்றுத்திறனாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதால் வழக்கபோல் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே தொடர்ச்சியாக முகாம் நடத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு வட்டம் வாரியாக வீட்டுமனைப் பட்டா கோரி மாற்றுத்திறனாளிகள் அளித்துள்ள மனுக்களையும் ( 162 ) மாற்றுத்திறனாளிகளின் விபர பட்டியலையும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன இதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டா விரைவாக வழங்க வேண்டும்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் நடைபெற்ற குளறுபடிகள், பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இடையூறுகள் தொடர்பாக நடைபெற்ற விசாகா கமிட்டி விசாரணை ஒருதலைபட்சமாக நடத்தி தவறுகள் செய்த டி டி ஆர் ஓ,, ஜெ ஆர் ஓ மீ்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளாமல் புகாரளித்த பாதிக்கப்பட்ட பெண் பணியாளரை பணிநீக்கம் செய்து பெண் பணியாளர் விரோதமாக போக்கில் செயல்பட்டு தமிழக அரசிற்கு அவப்பெயரை தொடர்ச்சியாக ஏற்படுத்தியுள்ளதால் இது விசாரிக்க ஐ ஏ எஸ் அலுவலரை நியமித்து மீண்டும் முழுமையாக விசாரணை நடத்தி பெண் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை அளித்தபோது அனைத்தையும் விரைவாக தீர்வு காணப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.



