நீலகிரி, மே 01
ஜம்மு காஷ்மீரின் தெற்கு பகுதியில் உள்ள பஹல்காம் அருகே பைரன் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர் இந்த தாக்குதலில் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது இந்த சம்பவத்திற்கு பல்வேறு உலக நாடுகளும் பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன
மேலும் பல்வேறு இடங்களிலும் தாக்குதல் சம்பவத்தில் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி தெரிவிக்கப்பட்டது இதன் தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊட்டி தாலுகா குழு சார்பில் இரங்கல் கூட்டம் ஊட்டி ஏடிசி பகுதியில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு தாலுகா செயலாளர் நவீன் சந்திரன் தலைமை வகித்தார் நிகழ்வில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது பின்னர் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது மாவட்ட குழு உறுப்பினர் கணேசன் கட்சியின் மூத்த நிர்வாகி மைக்கேல் ஆகியோர் கண்டன உரையாற்றினார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கரலிங்கம் நிறைவுறையாற்றினார் இதில் புட்டுசாமி பழனிசாமி தமிழ்மணி குமார் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டே கண்டன கோஷங்களை எழுப்பினர் உறுப்பினர் சுந்தரி நன்றி தெரிவித்தார்