மதுரை மே 13
மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் ஜெயபாரத் ஹோம்ஸ் நியூ நத்தம் ரோட்டில் உள்ள சமுதாயக் கல்லூரியில் பிரதம மந்திரியின் ஆயுஷ்மன்பாரத் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் முகாம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மதுரை சமுதாயக் கல்லூரி நியூ சரவணா மல்டி கிளினிக் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி ரோட்டரி கிளப் ஆப் ஜெம்ஸ் மதுரை ரோட்டரி கிளப் ஆப் மதுரை மிட் டவுன் இணைந்து நடத்திய இந்த முகாமினை சமுதாயக் கல்லூரி முதல்வர் டாக்டர் சகாய ஜென்ஸி துவக்கி வைத்து வரவேற்புரை நிகழ்த்தினார். பிரதம மந்திரி மற்றும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் பற்றிய பயன்பாடுகளை மாவட்ட திட்ட அலுவலர் சதீஷ் குமார் பயனாளிகளிடம் எடுத்து கூறினார். அதனைத் தொடர்ந்து மதுரை ரோட்டரி மிட் டவுன் கிளப் மற்றும் மதுரை ஜெம்ஸ் சார்பாக கௌசல்யா கலந்து கொண்டு பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் மற்றும் குடிநீர் வழங்கினார்கள் முகாமில் சுமார் 470 பயனாளர்கள் கலந்து கொண்டனர். அதில் 200 பயனாளர்களுக்கு பிரதம மந்திரி காப்பீடு திட்ட அட்டையும் 47 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் அட்டையும் உடனடியாக வழங்கப்பட்டது. எஞ்சியுள்ள நபர்களுக்கு முறையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு காப்பீட்டு திட்டம் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி முதுநிலை சமூக பணி மாணவர்கள் களப்பணி ஆற்றி முகாம் வெற்றி பெற உதவி புரிந்தனர். இதன் நிறைவில் இத்துறையின் தலைவர் கிருஷ்ணவேணி சிறப்புரையாற்றினார். இதற்கான ஏற்பாடுகளை மதுரை சமுதாயக் கல்லூரியின் நிறுவனர் மற்றும் மருத்துவர் விஜய சரவணன் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த முகாம் பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது என முகாமில் கலந்து கொண்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் பலர் மருத்துவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.