திருப்பூர், மே. 8:
தமிழகம் முழுவதும் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்திலும் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. 100 டிகிரிக்கும் மேல் வெயில் பதிவாகி வருகிறது. இதனால் பொதுக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் திருப்பூர் விஸ்வேஸ்வரர்சாமி கோவில் செயல் அலுவலராக பணியாற்றி வருபவர் சரவண பவன். இவர் வெயிலின் தாக்கம் குறையவும், மழை பெய்ய வேண்டி வலியுறுத்தியும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மவுன விரதம் இருந்தார்.