களியக்காவிளை, ஜுன் 23 –
மத்தியில் பாஜக அரசு பதவி ஏற்று 11 ஆண்டுகள் ஆகின்றன. 11 ஆண்டு சாதனைகளை விளக்கி பயிலரங்கம், பொதுக்கூட்டங்கள், சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் உள்ளிட்டவைகள் பா.ஜ.க வினரால் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மேல்புறம் தெற்கு ஒன்றிய பா.ஜ.க சார்பில் சழுவன் திட்டையில் பயிலரங்கம் நடந்தது. இதில் மேல்புறம் தெற்கு ஒன்றிய தலைவர் சரவண வாஸ் நாராயணன் தலைமை வகித்தார். ஒன்றிய பொதுச் செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். ஒன்றிய பொதுச் செயலாளர் ராஜேந்திர பிரசாத் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் பவானி எட்வின் ஜோஸ், முன்னாள் ஒன்றிய தலைவர் சேசர், மாவட்ட செயலாளர்கள் ஸ்ரீகுமார், விஜி, உள்ளிட்டோர் பேசினர். 2047-ம் ஆண்டு இந்திய நாடு வல்லரசு ஆக வேண்டும் இதற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த பயிலரங்க நிகழ்ச்சியில் மேல்புறம் தெற்கு ஒன்றிய பிரச்சார பிரிவு தலைவர் சதீஷ், ஒன்றிய துணைத் தலைவர் ராஜேஷ், களியக்காவிளை பேரூராட்சி துணைத் தலைவர் பென்னட்ராஜ், திலீப் குமார், ஒன்றிய செயலாளர்கள் சுகுமாரி, லதா ஒன்றிய பொருளாளர் கங்காதரன் மற்றும் கட்சியின் ஒன்றிய கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஒன்றிய செயலாளர் ஐயப்பன் நன்றி கூறினார்.