மதுரை: ஆக.27.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்று வரும் ஆவணித் திருவிழாவின் 11-ம் நாள் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இதையொட்டி மாலை நடைபெற்ற சப்தாவர்ண சப்பரத்தில், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.



