மதுரை, ஆகஸ்ட் 13 –
மதுரை மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (15.08.2025) மதுபான கடைகள் மூடல். மாவட்ட ஆட்சியர் உத்தரவு. மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே. பிரவீன் குமார் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரை மாவட்டத்தில் சுதந்திர தினம் முன்னிட்டு உரிமம் பெற்றுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் (FL1/FL2/FL3/FL3A/FL3AA /FL4 மற்றும் FL11) மனமகிழ் மன்றங்கள், தங்கும் விடுதியுடன் கூடிய மது அருந்தகங்கள், அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் ஆகியவை மூடப்பட்டு இருக்கும். மேற்படி 15.08.2025 அன்றைய தினத்தில் மது விற்பனை தொடர்பான விதிமீறல்கள் ஏதும் நடைபெறாமல் கண்காணிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்படி தினத்தில் மதுபான சில்லரை விற்பனை எதுவும் நடைபெறாது எனத் தெரிவித்துள்ளார்.


