சோழவந்தான், ஜூன் 20 –
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெரும் திருவிழா கடந்த இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 17 நாட்கள் நடைபெற்றது. திருவிழாவின் நிறைவு நாளான தீர்த்தவாரி திருவிழா நேற்று இரவு வைகை ஆற்றில் நடைபெற்றது. தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு மாலை 5 மணிக்கு ஜெனகை மாரியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக வந்து வைகை ஆற்றில் பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பொதுமக்களுக்குத் தரிசனம் தந்தார். தொடர்ந்து ஊஞ்சலாட்டம் தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோவில் அருகில் அதிமுக மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் பேரூர் கழகம் சார்பில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு அன்னதானத்தைத் தொடங்கி வைத்தார். பேரூர் செயலாளர் முருகேசன் வரவேற்றார். அம்மா பேரவை மாநில நிர்வாகி வெற்றிவேல், பேரூர் செயலாளர் முருகேசன், வாடிப்பட்டி யூனியன் முன்னாள் சேர்மன் ராஜேஷ், அண்ணா முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜ், முன்னாள் பேரூராட்சித் தலைவர் எம்.கே.முருகேசன், பேரூராட்சி கவுன்சிலர்கள்
உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.