கிருஷ்ணகிரி, பிப்ரவரி 23 –
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் காலமுறை ஊதியம் வேண்டி கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இன்று கவனத்தை ஈர்க்கும் வகையில் கருப்பு பட்டை அணிந்து உள்ளிருப்பு மற்றும் தொடர் வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் ஆண்கள் 10 பேர். கர்ப்பிணி பெண் உள்ளிட்ட பெண்கள் 3 மொத்தம் 13 பேர் கிராம உதவியாளர்கள். போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தருமபுரி- திருப்பத்தூர் சாலையில் சாலை 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போச்சம்பள்ளி போலீசார் கைது செய்தனர்.
சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் கிராம உதவியாளர்களுக்கு, முறையான காலமுறை ஊதியம் வழங்கி பணிநிரந்தரம் செய்ய வேண்டும். பணியின் போது உயிரிழக்கும் கிராம உதவியாளர்களின் குடும்பத்தினருக்கு, எவ்வித தடையுமின்றி மீண்டும் கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். ஏற்கனவே உள்ள பணிகளுடன் கூடுதல் பொறுப்புகளை வழங்கி பணிச்சுமையை அதிகரிக்கக்கூடாது. 2007-ஆம் ஆண்டிற்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு இதுவரை முறையான சிபிஎஸ் (CPS) எண் மற்றும் அதற்கான நிதியுதவி கிடைக்கவில்லை. அதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும். என்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். எங்களது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படாவிட்டால், வரும் பிப்ரவரி 27ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம் என்று எச்சரித்தனர்.



