கிருஷ்ணகிரி, செப். 27 –
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கிருஷ்ணகிரி பிரிவு சார்பாக, தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 15 ம் நாளினை சிறப்பிக்கும் பொருட்டு மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா விரைவு மிதிவண்டி போட்டியை துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி. க்ரிதி காம்னா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட முழுவதிலுமிருந்து பல்வேறு பள்ளிகளிலிருந்து 285 மாணவர்களும் 37 மாணவிகள் என மொத்தம் 322 நபர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆண்கள் பிரிவில் 13 வயது பிரிவில் வசீகரன்.B முதலிடமும், அஷ்லின் ஜோ இரண்டாமிடமும், பரத் ராம்.S மூன்றாமிடமும், 15 வயது பிரிவில் S.ஆ. உதயநிதி முதலிடமும், மு. அஸ்வின் இரண்டாமிடமும், A. ஆஷிஷ் ஜோஷ்வா மூன்றாமிடமும், 17 வயது பிரிவில் S. பிரதீப் முதலிடமும், B. திருவரசு இரண்டாமிடமும், A.P. தியானேஸ்வரன் மூன்றாமிடமும், பெண்கள் பிரிவில் 13 வயது பிரிவில் நித்ய ஸ்ரீ முதலிடமும், கீர்த்தி ஸ்ரீ இரண்டாமிடமும், சுபிக்ஷா மூன்றாமிடமும், 15 வயது பிரிவில் வித்யாஸ்ரீ முதலிடமும், கமலிகா இரண்டாமிடமும், தனுசியா மூன்றாமிடமும், 17 வயது பிரிவில் சன்ஸ்ரீ முதலிடமும், தீபிகா இரண்டாமிடமும், நேத்ரா நிவாஸினி மூன்றாமிடமும் பெற்றனர்.
வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுத்தொகை முதல்பரிசு ரூ. 5000, 2 ம் பரிசு ரூ. 3000, மூன்றாம் பரிசு ரூ. 2000, 4ம் பரிசு முதல் 10 ம் பரிசு வரை தலா ரூ.1000 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் வெற்றி பெற்றவர்களின் பரிசுத் தொகை அவரவர் வங்கி கணக்கில் விடுவித்து வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திரு. இராஜகேபால் மற்றும் பயிற்றுநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



