புதுக்கடை, ஆக. 21 –
புதுக்கடை அருகே மாராயபுரம் பகுதியை சேர்ந்தவர் பாபுராஜ் (62). தொழிலாளி. இவருக்கு வசந்தா (50) என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். பாபுராஜ் மதுப்பழக்கத்திற்கு அடிமையான காரணத்தால் மனைவி மகளுடன் தாய் வீட்டுக்கு பிரிந்து சென்றனர். இதனால் பாபுராஜ் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பாபுராஜ் தங்கி இருந்த வீட்டில் நயிலான் கயிற்றில் தூக்கு மாட்டி இறந்த நிலையில் காணப்பட்டார். அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் மனைவி வசந்தா கணவரை உடனே குழுத்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து புகார் அளித்தார். புதுக்கடை போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


