புதுக்கடை, ஆக. 25 –
புதுக்கடை அருகே கரும்பிலாவிளை பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மகன் மனேஷ் மோன் (13). இவர் பைங்குளத்தை அடுத்த அம்சி உயர்நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை ஆகும். அப்போது வீட்டின் பின்புறத்தில் உள்ள ஒரு சாய்ந்த மரத்தில் மனேஷ் மோன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
இதைக்கண்ட உறவினர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இதையடுத்து புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். மாணவனின் உடல் மாலை பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கடை போலீசார் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது சம்பவமா? என வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


