கோவை, ஆக. 03 –
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆச்சிப்பட்டி ஊராட்சியின் 8 வது வார்டு முருகன் லே அவுட் பகுதியில் சுமார் 50 சென்ட் இடம் பூங்காவுக்கு என ஒதுக்கப்பட்டிருந்தது.
ஊராட்சி நிர்வாகம் இந்த இடத்தில் எவ்வித பராமரிப்பும் மேற்கொள்ளாமல் இருந்து வந்தது.
இதன் காரணமாக பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடம் புதர் மண்டி காணப்பட்டது. இதனை சுத்தப்படுத்தி பூங்கா அமைத்துக் கொடுக்கும்படி அப்பகுதி மக்கள் தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் இந்த விவகாரத்தில் அலட்சியமாகவே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 8வது வார்டைச் சேர்ந்த த.வெ.க. நிர்வாகிகளான முருகேசன் முத்துலட்சுமி
தலைமையில் வி.பாலமுருகன் முன்னிலையில் அருள், ஹரிஹரன, அபிநவ், சரண்பிஜித், சபீர், பிரியா, லட்சமி, மஞ்சுளா, மிருதுளா, கோமதி, சுசிலா, சௌமியா, தேவராஜ், செல்வம், காத்தூன் பேகம், ரமேஷ், முத்துலட்சுமி, சேதுராம், ஆறுசாமி, சுமித்ரா, கனகம்மாள் ஆகியோர் கலந்து கொண்டு பூங்காவினை சுத்தம் செய்தனர்.



