சுசீந்திரம், நவ. 7 –
சுசீந்திரம் அருகே உள்ள பறக்கை சி டி எம் புரத்தைச் சார்ந்தவர் ரகுநாத் (45). இவர் என்ஜிஓ காலனி ஒத்தக்கடை ஜங்ஷன் பகுதியில் ஆட்டோ கன்சல்டிங் கடை நடத்தி வருகிறார். பறக்கை சி டி எம் புரத்தைச் சார்ந்த சசிகுமார் (45), சுரேஷ் (42), சந்திரன் (40) ஆகியோர் அடிக்கடி இவரிடம் குடிப்பதற்கு பணம் பெற்றதாக தெரிகிறது. அடிக்கடி பணம் கேட்டதால் இவர் பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டார். இதனால் இவர்கள் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று சுரேஷ் இவரிடம் 50 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். ரூபாய் கொடுக்காத காரணத்தினால் சசிகுமார், சந்திரன் ஆகியோர் சுரேஷுடன் சேர்ந்து ரகு நாத்தை கையாலும அரிவாளை திருப்பி வைத்து தாக்கி உள்ளனர். இது குறித்து ரகுநாத் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


