By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நொய்யல் நதியை பாதுகாக்க கோரி விவசாய அமைப்புகள் உண்ணாவிரத போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > நொய்யல் நதியை பாதுகாக்க கோரி விவசாய அமைப்புகள் உண்ணாவிரத போராட்டம்
திருப்பூர்

நொய்யல் நதியை பாதுகாக்க கோரி விவசாய அமைப்புகள் உண்ணாவிரத போராட்டம்

Last updated: July 14, 2025 5:35 pm
July 14, 2025 4 Views
Share
SHARE

மங்கலம், ஜூலை 14 –

நொய்யல் ஆறு கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் உருவாகி கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் வழியாக 180 கிலோமீட்டர் தூரம் வரை பயணித்து நொய்யல் பகுதியில் காவிரி ஆற்றில் கலக்கிறது. திருப்பூரின் காஞ்சி மாநதி என்று அழைக்கக்கூடிய நொய்யலாறு தற்போது மண்ணும், மனிதனும் பயன்படுத்த முடியாத அளவுக்கு விஷமாகி வருகிறது. ஆற்றில் கழிவு நீரும், பிளாஸ்டிக் கழிவுகளும், பல இடங்களில் ஆற்றை மறித்து ஆக்கிரமிப்புகளும், ஆகாயத்தாமரை சூழ்ந்து காணப்படுவதால் ஆறு மாசடைந்து காணப்படுகிறது. ஆற்றின் ஓரத்தில் தொழிற்சாலை கழிவுகள், மருத்துவ கழிவுகள், குடியிருப்பு கழிவுகள் நேரடியாக நொய்யல் ஆற்றில் கலப்பதால் நொய்யல் ஆற்றுப்படுகையில் வசிக்கும் மக்களுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சில சாய, சலவை தொழிற்சாலைகள் டன் கணக்கில் விஷத்தன்மை வாய்ந்த அபாயகரமான சாய கழிவுகள் நொய்யல் ஆற்றின் கிளை வாய்க்கால் ஓரங்களில் சாய கழிவுகளை கொட்டி வைத்தும் விதிமீறலில் ஈடுபடுகின்றனர். நொய்யலை பாதுகாக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை அரசுக்கு மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளாமல் இருந்து வருவதால் மாசடைந்து வரும் நொய்யல் ஆற்றை காப்பாற்ற கோரி விவசாய அமைப்புகள் ஒன்றிணைந்து திருப்பூர் அருகே மங்கலத்தில் நொய்யல் நதி மாசடைந்து நொய்யல் நீர் பயன்படுத்துவதற்கு அற்ற தண்ணீராக மாறி புற்றுநோய் அபாயமும் ஏற்பட்டுள்ளது. நொய்யல் நதியை காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்கள், விவசாய அமைப்புகள் சமூக ஆர்வலர்கள் பல்வேறு அரசியல் கட்சியினர்கள் பங்கேற்பு.

இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தனியார் இடத்தில் பந்தல் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இந்த போராட்டத்தை கைவிடக் கோரியும் நொய்யல் ஆற்றில் குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் மோகனசுந்தரம் தலைமையில் தெற்கு வட்டாட்சியர் சரவணன் மற்றும் காவல் உதவி ஆணையர் ஜான், ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் ஆகியோர் போராட்ட குழுவினர் உடன் நள்ளிரவில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் காலை நொய்யல் ஆற்றில் தூய்மை பணி செய்து தரப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. முதலில் தூய்மை பணியை துவங்குங்கள் என கூறி விவசாயிகள் அறிவித்தபடி நொய்யல் நதி காப்பாற்ற கோரி அறிவித்தபடி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து விவசாய அமைப்புகள் நொய்யல் நதியை மீட்க கோரி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

You Might Also Like

3 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை துவக்க விழா

திருப்பூரில் 20-வது கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சி

இந்து முன்னேற்ற கழகத்தின் சார்பில் கல்வி கண் திறந்த காமராஜர் பிறந்த நாள் விழா

காமராஜர் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது

திருப்பூர் மாவட்டத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை தரும் முதலமைச்சர்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
மாவட்டம்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பனை விதை நடும் விழா

December 10, 2024 26 Views
டேலண்ட் ரிசோர்ஸ் ஒலிம்பேட் ஸ்ரீ சைதன்யா சாதனை
ரீத்தாபுரத்தில் மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி பலி
காலாவதியான இனிப்புகளை அப்புறப்படுத்த உணவு
புதிதாக தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?