ஈரோடு, செப்.15:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பச்சாம்பாளையம் பகுதியில் தேசிய எண்ணெய்வித்து அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலக்கடலை சாகுபடியை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விளைநிலத்திற்கு நேரில் சென்ற மாவட்ட ஆட்சியர், நிலக்கடலை பயிரின் வளர்ச்சி நிலை, சாகுபடி செய்யப்பட்டுள்ள பரப்பளவு மற்றும் பயிர் பராமரிப்பு முறைகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். மேலும், தேசிய எண்ணெய்வித்து அபிவிருத்தி திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் உதவிகள் மற்றும் சாகுபடி தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் கடைப்பிடிக்கும் தொழில்நுட்ப முறைகள் மற்றும் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். விவசாயிகளின் விளைச்சலை அதிகரிக்கவும், எண்ணெய்வித்து பயிர் சாகுபடியை ஊக்குவிக்கவும் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.



