பூதப்பாண்டி, செப்டம்பர் 24 –
பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் மூன்றாவது ஆண்டு விழாவை முன்னிட்டு தோவாளை ஊராட்சி ஒன்றிய எரிவாயு மையத்தில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு
வட்டார வளர்ச்சி அலுவலர் ( கிஊ) தங்கராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய பொறியாளர் கவிதா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர், பணி பார்வையாளர் மேகலா மற்றும் வனத்துறை சார்பாக வனச்சரக அலுவலர் நடராஜன், வனவர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



