திருப்பூர், ஜூன் 28 –
தேமுதிக திருப்பூர் மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் ஸ்ரீ நடராஜ் தியேட்டர் நொய்யல் பாலம் அருகில் உள்ள ஸ்ரீ காவேரி அம்மன் திருமண மண்டபத்தில் திருப்பூர் மாநகர் மாவட்டம் திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு,காங்கேயம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு பிஎல்ஏ, டு நிர்வாகிகள் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தேர்தல் தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுகம் கூட்டம் நடைபெற்றது.
102-காங்கேயம் சட்டமன்ற தொகுதி, 113-திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி,
114-திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி, ஊத்துக்குளி ஒன்றியம் ஆகிய மூன்று தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. விழாவிற்கு திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் விசைத்தறி பி.ஆர் குழந்தைவேல் தலைமை தாங்கினார். மத்திய பகுதி செயலாளர் விகாசினி வி.எஸ் தேவேந்திரன் வரவேற்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக மேற்கு மண்டல தேர்தல் பொறுப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அழகாபுரம் ஆர். மோகன்ராஜ் Ex MLA கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில், தேர்தல் பணிக்குழு செயலாளரும் எஸ். கணேசன் அவர்களும் கழக தொழிற்சங்க பேரவை துணைச்செயலாளரும் திருப்பூர் மாநகர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான திரு எஸ்.முருகராஜ் அவர்களும் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலை முன்னிட்டு கழக வளர்ச்சி குறித்து ஆலோசனை வழங்கினார்கள்.
இந்த கூட்டத்தில் திருப்பூர் தெற்கு தொகுதி பொறுப்பாளர் பொட்டு காளியப்பன் ,வடக்கு தொகுதி பொறுப்பாளர் வசந்த் யுவராஜ், காங்கேயம் தொகுதி பொறுப்பாளர் மணி ஆகியோர் தொகுதி பொறுப்பாளர்களை மண்டல பொறுப்பாளர் அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் ராயபுரம் பா. ஆனந்த், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியம், முத்து வெள்ளியங்கிரி, சசிகலா கணேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் சிவராஜ், கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் சுப்ரமணியம், வரதராஜ், சேக் முகமது, கருப்பசாமி, மாவட்ட கழக நிர்வாகிகள் சோமசுந்தரம், பாலகிருஷ்ணன், உதயகுமார், சாமிநாதன், குப்புசாமி, ரவிக்குமார், கந்த சரவணகுமார், ராகவனந்தம் பகுதி கழகச் செயலாளர்கள் ஆனந்த் சண்முகராஜா, சரவணன், மோகன்ராஜ், பிரபு, கண்ணன், தேவேந்திரன், பாலாஜி, ஒன்றிய கழகச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், சண்முகம் வேலுச்சாமி, மகாலிங்கம் கிட்டுச்சாமி, நகரக் கழக செயலாளர் இதயத்துல்லா, ரவி மற்றும் மாநகர் மாவட்ட உட்பட்ட அனைத்து கழக நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டனர். குன்னத்தூர் பேரூர் கழக செயலாளர் ஜெய்சங்கர் நன்றியுரை கூறினார்.



