கோவை, ஆகஸ்ட் 26 –
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி துறையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு வழங்கும் பங்களிப்பை எடுத்துரைப்பதற்காக கோவை மக்கள் சேவை மையம் சார்பில் Handloom Fashion Show–Season 8 நடத்தப்பட்டது.
கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மாவட்ட கல்லூரிகளில் நடைபெற்ற இந்த ஃபேஷன் ஷோவின் இறுதிப்போட்டி கோவையில் உள்ள கொங்குநாடு கலை & அறிவியல் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ மற்றும் மக்கள் சேவை மையம் நிறுவனர் வனதி ஸ்ரீனிவாசன் தலைமையேற்றார்.
முக்கிய விருந்தினராக கவிஞர், எழுத்தாளர் மற்றும் Small Differences நிறுவனர் மிசஸ். சோபனா குமார் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலாளர் மற்றும் இயக்குநர் டாக்டர். சி.ஏ. வசுகி, ஃபேஷன் தொழில் முனைவோர் மிசஸ். சங்கீதா பீட்டர் ஆகியோர் பங்கேற்றனர். ஃபேஷன் ஷோ போட்டிக்கான நடுவர்களாக ரேகா ராம் பிரசாத், ஹரினி ஜெயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.



