திருச்சி, ஏப். 30 –
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நெட்டவேலம்பட்டியில், விற்பனைக்காக 136 கிலோ புகையிலை பொருட்களை வைத்திருந்த ரவீந்திரன் என்பவரை உப்பிலியபுரம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.


