சென்னை, மே -13,
அதிமுக தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம் தி.நகர் கிழக்கு பகுதி சார்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி 70வது பிறந்த நாளை முன்னிட்டு தி.நகர் கண்ணம்மாபேட்டை, முத்துரங்கம் சாலையில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா விழா நடைபெற்றது. பகுதி செயலாளர் எம்.வெங்கட் ஏற்பாட்டிலும் வட்டச் செயலாளர் 141 வட்ட செயலாளார் ஜி.சுப்பு முன்னிலையிலும் நடைபெற்ற இந்திகழ்ச்சியில் தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டச் செயலாளர் தி.நகர் சத்யா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். மேலும் இந்திகழ்ச்சியில் கமலி .கணேஷ், ஜாகீர், சின்னத்தம்பி, மாலதி, கேசவன் மற்றும் மகளிரணியினர் பகுதி,வட்ட, நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நீர், மோர், பழரசங்கள் வழங்கினர்.



