கம்பம்; மே 04,
தேனி மாவட்டம் கம்பம் அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் 21 நாட்கள் வெகு விமர்சியாக கொண்டாடி வருவது வழக்கம். இதனைத் தொடர்ந்து சமுதாய மண்டகப்படியில் நடந்த பின்பு,பூக்குழி இறங்கும் நிகழ்வும் நடைபெற்றது.அம்மனுக்கு கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி எடுத்தல், ஆயிரம் கண் பானை எடுத்தல், அழகு குத்துதல், முளைப்பாரி எடுத்தல்,பால்குடம் எடுத்தல்,உருண்டு கொடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்தி வந்தனர்.இதன்படி கம்பம் பகுதியில் பல்வேறு தெருக்களில் கௌமாரியம்மன் முன் உதாரணமாக வைத்து திருவிழாக்கள் மக்கள் கொண்டாடி வந்தனர்.பாரதியார் நகர் பகுதியில் நடந்த சிறுவர் சிறுமிகளுக்கான ஓட்டப்பந்தயம், மியூசிக் சேர்,சோடா பாட்டில் நீர் நிரப்புதல்சோடா பாட்டில் நீர் நிரப்புதல்,உறியடித்தல் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆர்.எஸ் .பிரகாஷ் வழிகாட்டுதலின்படி கம்பம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் சாய் பிரசாத் மற்றும் கம்பம் பாபு ஆகியோர் சிறிய முயற்சியில் போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர் சிறுமிகளுக்கு பரிசு பொருட்களை வழங்கினார். மாவட்ட,நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.