நாகர்கோவில் மே 13
கன்னியாகுமரி மாவட்டம நாகர்கோவில் அருகே தேரேகால்புதூரில் உள்ள ஸ்ரீ சர்வ சக்தி விநாயகர் கோவில் ஆவுடை லிங்கம் சன்னதியில் அக்னி தாக்கம் குறைந்து மழை வேண்டியும். தொற்று நோய்கள் பரவாமல் இருக்க வேண்டி திருவாதிரை தினத்தை முன்னிட்டு திருவாசகம் பாடும் நிகழ்சி நடைபெற்றது. இதில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு திருவாசகம் ஓதினார்கள்.
திருவாதிரை நாளில் அம்மன் மற்றும் சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள், பொங்கல் வழிபாடுகள். தீ மிதித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திருவாதிரை தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்றன. அந்த வகையில் நாகர்கோவிலை அடுத்துள்ள தேரேகால் புதூரில் சண்முகாநகரில் உள்ள ஸ்ரீ சர்வ சக்தி விநாயகர் கோவிலில் திருவாசகம் ஒதுதல் நிகழ்சி நடைப்பெற்றது . கன்னியாகுமரி குகந்தேஸ்வரன் கோவில் பூசாரி சிவகுரு முருகன் தலைமையில் நடைப்பெற்ற இந்த நிகழ்சியில் 100 – க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு திருவாசகம் ஓதினார்கள். இந்த பூஜையில் அக்னியின் தாக்கம் குறைந்து மழை வேண்டியும் தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் வேண்டி ஓதப்பட்டது.