திருவள்ளூர், ஆக.27.
திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், இயக்க மறுசீரமைப்பு (SSA-2) ஆலோசனைக் கூட்டம் மணவாளநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சசிகுமார் த
லைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட பார்வையாளரும் ஈரோடு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவருமான சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
கூட்டத்தில், வரும் 2029 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியை அடிமட்ட அளவில் வலுப்படுத்துவது, புதிய வட்டார மற்றும் மண்டல தலைவர்களை தேர்வு செய்து அவர்களை எதிர்கால தேர்தல்களுக்கு தயார்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு 10 பூத்துகளுக்கும் ஒரு மண்டலத் தலைவர் நியமித்து மாவட்டம், வட்டாரம், நகரம், பகுதி மற்றும் ஊரக அளவில் கட்சிப் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வட்டார, ஒன்றிய, நகர, பேரூர், மண்டலம் மற்றும் மாவட்ட அளவிலான கட்சி பொறுப்புகளுக்கு போட்டியிட விரும்பும் நிர்வாகிகளுக்கான விருப்ப மனு படிவங்கள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தொடர்பு மைய தலைவர் ஏஜி சிதம்பரம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், மாநில நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், மாவட்ட துணைத் தலைவர்கள், மகளிர் அணி, இளைஞர் காங்கிரஸ், சிறுபான்மை பிரிவு, ஊடகப்பிரிவு, வழக்கறிஞர் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். மாநிலம், மாவட்டம், வட்டாரம் மற்றும் நகர அளவிலான 300-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு கட்சியின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.



