திருவண்ணாமலை, செப். 27 –
திருவண்ணாமலையில் மாநில அளவிலான இலக்கு பந்து போட்டியை மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் இன்று துவக்கி வைத்தார். தமிழ்நாடு இலக்கு பந்து சங்கம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட இலக்கு பந்து சங்கம் இணைந்து 7-வது ஜூனியர் 6 வது சப்-ஜூனியர் 3-வது கலப்பு இலக்குப்பந்து போட்டிகள் திருவண்ணாமலை அருகேவுள்ள சோமாசிபாடி புதூரில் இயங்கிவரும் ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு தமிழ்நாடு மாநில தொழில்நுட்ப தலைவர் எஸ். கலைமுருகன் தலைமை தாங்கினார். மாநில இலக்குப்பந்து சங்க தலைவர் ப. கார்த்திவேல்மாறன் முன்னிலை வகிக்க மாவட்ட இலக்கு பந்து சங்க செயலாளர் க. மோனிஷா அனைவரையும் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.
இதில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் ஜெ. சின்னப்பன் (திருவண்ணாமலை), ஜெ. செல்வகுமார் (கள்ளக்குறிச்சி), சமூக மருத்துவத்துறை துணை பேராசிரியர் ஜி. வெங்கடேஷ், அண்ணாமலை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைவர் எஸ். ரேவதி, இலக்கு பந்து சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி. சதீஷ்குமார் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, தருமபுரி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், நாமக்கல், சென்னை உள்பட 15 மாவட்டங்களைச் சேர்ந்த 300 வீரர் – வீராங்கனைகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இலக்கு பந்த சங்க தலைவர் சதீஷ்குமார் ஜெயகோபி நன்றி கூறினார். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நாளை 28ந்தேதி மாலை 3.30 மணியளவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.



