திருப்பூர், ஜூன் 28 –
கல்லூரி சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஐயப்பன் கோவில் கடந்த 1966 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 1977, 1990, 1998, 2013 -ம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஐந்தாவது கும்பாபிஷேகம் வருகிற ஜூலை 2-ம் தேதி நடைபெற உள்ளது.
கோவிலின் தலைவர் நாச்சிமுத்து, பொதுச்செயலாளர் மணி, பொருளாளர் முருகேசன், துணைத் தலைவர் மோகன்ராஜ், இணைச்செயலாளர்கள் சிவக்குமார், பொன்னுதுரை, சந்திரசேகர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: சபரிமலையில் இருப்பது போன்று திருப்பூர் ஸ்ரீ ஐயப்பன் கோவிலிலும் தாந்த்ரீக முறைப்படி நித்திய பூஜைகள் நடைபெற்ற வருகிறது. விநாயகர், சுப்பிரமணியர், கைலாசநாதர், கிருஷ்ணர், பத்ரகாளியம்மன், மஞ்சள்மாதா, நவக்கிரக சன்னதி இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் வருகிற இரண்டாம் தேதி நடைபெற உள்ளது.
இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மகா கணபதி ஹோமத்துடன் தினமும் பூஜைகள் நடைபெற உள்ளது. வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு அத்தாழ பூஜையும்,
வருகிற ஜூலை இரண்டாம் தேதி காலை 5 மணிக்கு பூஜைகள் துவங்குகின்றன. காலை 6 மணி முதல் 7 மணி வரை சபரிமலை தந்திரி கண்டரு மோகனாரு, கண்டரு மகேஷ் மோகனரு தந்திரிகள் முன்னிலையில் அஷ்ட பந்தனம் மருந்து சாத்தி மகா அபிஷேகமும் ஜீவகலச அபிஷேகமும் நடைபெற உள்ளது.28ஆம் தேதி முதல் கலை நிகழ்ச்சிகள் சலங்கை கம்பத்து ஆட்டம், ஐயப்பன் சரிதம்பரதநாட்டியம் நிகழ்ச்சி, பவளக்கொடி கும்மி ஆட்டம், பட்டிமன்றம் நடைபெற உள்ளன.
ஐயப்பன் சன்னதி முன்னர் துவார பாலகர் சிலை புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. தேக்கு மர கொடிமரம் அமைத்து தங்கத்தகடு பதிக்கும் பணிகள் 6 மாதங்களுக்கு பின்னர் நடைபெறும். இந்த கோவில் அருகில் உள்ள சௌடாம்பிகை கல்யாண மண்டபத்தில் கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தரக்கூடிய 20,000 க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். வருகிற நான்காம் தேதி காலையில் கலச பூஜையும் ஐயப்ப சுவாமிக்கு 25 கலச அபிஷேக பூஜையும் உச்ச பூஜையும் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து பூதாபலி பூஜை நடைபெற உள்ளது என தெரிவித்தனர்.



