திருப்பத்தூர், ஜூன் 25 –
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஓசை தொண்டு நிறுவனம் மற்றும் தூய நெஞ்சக் கல்லூரியும் இணைந்து தூய்மை பணிகளை மேற்கொண்டனர். தூய்மைப் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் செல்வம் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஓசை தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் விஜி தலைமையில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தினை சுற்றி தூய்மைப்படுத்துதல், பிளாஸ்டிக் பயன்பாடுகள் தவிர்த்தல், செடி மற்றும் மரங்களுக்கு மண் கட்டுதல் ஆகிய பணிகளை செய்தனர். மேலும் திருப்பத்தூர் துணை ஆட்சியர் அலுவலக வளாகத்திலும் பணிகளை மேற்கொண்டனர்.
இந்த சமூக சேவையின் போது ஓசை தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் விஜி, பிஆர்ஓ ராமமூர்த்தி, டாக்டர் அருள், டாக்டர் ரமேஷ், டாக்டர் நர்மதா, தூய நெஞ்சக் கல்லூரியின் முதல்வர் மரிய அந்தோணி ராஜ், இல்லத்தந்தை பிரவீன் பீட்டர், துணை முதல்வர் முனைவர் சண்முகம், முதல்வர் தியோபில் – பிரிவு ll, குடும்ப நல ஆலோசகர் அருள் தாஸ், சமூக நலத்துறை சண்முகம், சமூக ஆர்வலர்கள் அம்பலூர் அசோகன், கலாம் உதவும் தொண்டு நிறுவனம் நிறுவனர் ராஜா மற்றும் 50க்கும் மேற்பட்ட தூய நெஞ்சக் கல்லூரி மாணவ மாணவிகள், சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.