திருப்பத்தூர் அடுத்த களர்பதி கிராமத்தில் ஸ்ரீ வேடியப்பன் ஸ்ரீ மாரியம்மன் மண்டல பூஜையினை முன்னிட்டு திரையிசைப் பாடல்களில் சமூக நலன் கருத்துக்களை பெரிதும் வலியுறுத்தி எழுதியது கண்ணதாசனே! வாலியே! என்னும் இன்னிசை பாட்டு பட்டிமன்றம் நடைபெற்றது.
திருப்பத்தூர்: மே:01, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அங்கநாதவலசை, களர்பதி கிராமத்தில் ஸ்ரீ வேடியப்பன் ஸ்ரீ மாரியம்மன் சுவாமி மண்டல பூஜையினை முன்னிட்டு மாபெரும் இன்னிசை பாட்டு பட்டிமன்றம் நடைபெற்றது.
திரையிசைப் பாடல்களில் சமூக நலன் கருத்துக்களை பெரிதும் வலியுறுத்தி எழுதியது கண்ணதாசனே! வாலியே ! என்னும் தலைப்பில் நடைபெற்ற இப்பட்டிமன்ற நிகழ்விற்கு நடுவராக நகைச்சுவை நண்மணி நல்லாசிரியர் விருது பெற்ற பல குரல் மன்னன் வை. அரசு அரூர், கண்ணதாசனே என்னும் தலைப்பில் தமிழ்நாடு அரசு விருதாளர் கலைவளர்மணி செ.ரஜினி எம்.ஏ.,பி.எட்.,எம்.பில்.,பி.எச்.டி., திருப்பத்தூர், தமிழாசிரியர் மு.சரவணன் எம்.ஏ.,பி.எட்., வாணியம்பாடி, வாலியே என்னும் தலைப்பில் கவிஞர் ஆதி. சௌந்தரராஜன் எம்.ஏ.,எம்.பில்.,பி.எட்.,பி.எச்.டி.,அரூர், தமிழாசிரியர் கரு.பிரபாகரன் எம்.ஏ.,பி.எட்.,பி.எச்.டி.,களர்பதி, ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். நிகழ்வின் விவாதங்களின் அடிப்படையில் கவிஞர் கண்ணதாசனும், கவிஞர் வாலியும் கவிதை சமூகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிசம் எனவே இருவரும் தவிர்க்க முடியாத கவிஞர்கள். இருவருமே இலக்கிய உலகில் சமூக சிந்தனையோடு கருத்துக்களை பதிவிட்டவர்கள் என தீர்ப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் களர்பதி கிராமத்தினைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், இலக்கிய சிந்தனையாளர்கள், ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் என பலரும் பங்கேற்றனர்.