மயிலாடுதுறை, ஜுலை 7 –
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பிறந்த நாள் விழா மற்றும் திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனைப் பிரச்சார கூட்டம் திருக்கடையூர் கடை வீதியில் செம்பனார்கோவில் மத்திய ஒன்றிய இளைஞரணி சார்பில் செம்பை மத்திய ஒன்றிய செயலாளர் பி.எம். அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நிவேதா எம். முருகன், தலைமை கழக பேச்சாளர் நாகராஜன், அருள்தாஸ், குமரவேல் ஆகியோர் அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசினர்.
இக்கூட்டத்தில் மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மருது, ஒன்றிய செயலாளர்கள் அப்துல்மாலிக், அன்பழகன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மாரியப்பன், அணி நிர்வாகிகள் மற்றும் மூத்த முன்னோடிகள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.