அஞ்சுகிராமம், செப். 15 –
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்கவும், குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வக்கீல் மதியழகன் தலைமையில் உறுதிமொழி ஏற்பு ஆலோசனை கூட்டம் மருங்கூரில் நடந்தது.
கூட்டத்திற்கு பேரூர் திமுக செயலாளர்கள் மருங்கூர் மகேஷ், அழகை ஐயப்பன், தேரூர் முத்து, மயிலாடி டாக்டர் சுதாகர் முன்னிலை வகித்தனர். அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் மதியழகன் தலைமையில் ஒன்றிய நிர்வாகிகள் சிவகுமார், ஜோஸ்பின் விஜியா, வெங்கடேஷ், பூக்கடை மணிகண்டன், ஜோசப் செல்வதாஸ், இராசோகோபால், சித்திரை புத்திரன், சுயம்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியம் அதிக உறுப்பினரை சேர்த்து மாவட்ட கழகத்தில் பெருமைப்படுத்தப்பட்டதற்கு காரணமாக இருந்த ஒன்றிய கழக நிர்வாகிகளுக்கு ஒன்றிய செயலாளர் மதியழகன் சால்வை அணிவித்து பாராட்டுதலையும், நன்றியையும் தெரிவித்து கொண்டார்.



