நாகர்கோவில், ஏப். 17 –
விளவங்கோடு தொகுதி பாஜக வேட்பாளர் விஜயதரணி இன்று பயணம் , இரவிபுதூர்க்கடை பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தின் போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்: மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்காக தானும் நீண்ட காலமாக இந்தச் சட்டத்திற்காகப் பரிந்துரைத்து வந்ததாகவும், பிரதமர் மோடியின் முயற்சிகளால் அது தற்போது நனவாகியுள்ளது.
மாநில சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் 33% இட ஒதுக்கீடு பெண்களுக்குப் பெரிதும் பயனளிக்கும் என்றும், அது அவர்களின் பிரச்சினைகளை மிகவும் திறம்பட விவாதிக்க வழிவகுத்து, அரசியல் அமைப்பில் ஒரு முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொகுதி மறுவரையறை காரணமாக இந்தச் சட்டம் தென்னிந்திய மாநிலங்களைப் பாதிக்கக்கூடும் என்ற திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் விமர்சித்து வருகின்றன. இவை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் பொய்ப் பிரச்சாரம். கருப்பு சட்டை அணிந்து கொண்டு பாராளுமன்றம் சென்ற திமுகவினருக்கு பிரதமர் சவுக்கடி கொடுத்துள்ளார்.
இந்தச் சட்டம் அரசியலில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். திமுக உண்மையாகவே பெண்கள் அதிகாரமளித்தலை ஆதரிக்காததால் கவனத்தைத் திசை திருப்ப முயற்சிக்கிறது.
திமுக தனது கட்சிக்குள் பெண்களுக்கு குறிப்பிடத்தக்க அரசியல் உரிமைகளையோ முக்கியத்துவத்தையோ வழங்குவதில்லை.
கனிமொழி ஓரங்கட்டப்படுவதை இதற்கு காரணமாக கூறலாம். மு.க.ஸ்டாலின் எப்போதாவது கனிமொழியை முதலமைச்சராக்குவாரா? அவர் தனது மகன் உதயநிதி ஸ்டாலினை முன்னிறுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளார்.
தான் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அப்பதவியை வகிக்கவிடாமல் தடுப்பதற்காக திமுக, காங்கிரஸ் கட்சிக்கு அழுத்தம் கொடுத்தது. சட்டமன்றத்தின் முன் வரிசைகளிலோ அல்லது முக்கிய தலைமைப் பதவிகளிலோ பெண்களை திமுக விரும்பவில்லை எனவும் விஜயதரணி பேட்டி அளித்துள்ளார்.



