திண்டுக்கல் மே :10
அகில உலக ரெட்கிராஸ் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மாவட்டக் கிளையின் சார்பாக இரத்த தான முகாம் சிறப்பாக நடைபெற்றது.
அதையொட்டி இரத்ததான முகாம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைப்பெற்றது.இம்முகாமில் சிறப்பு அழைப்பாளராக மருத்துவக் கல்லூரி தலைமைக் கண்காணிப்பாளர் டாக்டர். டி.சுரேஷ்பாபு கலந்து கொண்டு இரத்த தான முகாமை தொடங்கி வைத்தார்.இம்முகாமில் 30 -க்கும் மேற்பட்ட ரெட்கிராஸ் தன்னார்வலர்கள் இரத்த தானம் வழங்கினார்கள்.
இதில் மருத்துவர்கள் புவனேஸ்வரி, செந்தில்குமார்மற்றும் இரத்த வங்கி மருத்துவர் அபிநயா ஆகியோர் உடனிருந்தனர்.திண்டுக்கல் இந்தியன் ரெட்கிராஸ் மாவட்டக் கிளையின் துணைத் தலைவர் எம் .சரவணன் முன்னிலை வகித்தார். ரெட்கிராஸ் செயலாளர் சையது அபுத்தா ஹீர் மற்றும் பொருளாளர் ஆ.சுசிலாமேரி ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.பழநி கல்வி மாவட்ட ஜேஆர்சி. அமைப்பாளர் சு.ரவிச்சந்திரன் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினார். திண்டுக்கல் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் வாழ்நாள் உறுப்பினர் எ.ஜெயசீலன் கலந்து கொண்டார்.
ஜேஆர்சி ஆலோசகர்கள் ரமேஷ்குமார், ராஜா, நேசக்குமார், பெலிக்ஸ, சகாயராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் அவைத்தலைவர் டாக்டர்.என்.எம்.பி.காஜாமைதீன் சார்பாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உள்ள உள்நோயாளிகள் 700 பேருக்கு பிஸ்கட் பாக்கெட்டுகளும், தண்ணீர் பாட்டில்களும் விநியோகிக் கப்பட்டது.